Kavichudar - சிந்தனைத் துளிகள், பொன்மொழிகள்


தமிழ் பழமொழிகள் - Tamil Proverbs
 
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

* அகல உழுகிறதை விட ஆழ உழு.

* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

* அடக்கமே பெண்ணுக்கு அழகு.

* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

* அடாது செய்தவன் படாது படுவான்.

* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

* அழுத பிள்ளை பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்

* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன

* அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்

* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

* அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அற்ப அறிவு அல்லற் கிடம்

* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும்சொல்லுக்குறுதி.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.´

* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு..

* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.

* இல்லாது பிறாவது அள்ளாது குறையாத

* இளங்கன்று பயமறியாது

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இளமையிற்கல்வி கல்மேல் எழுத்து.

* இளமையில்சோம்பல் முதுமையில்வருத்தம்.

* இறங்கு பொழுதில் மருந்து குடி

* இறுகினால் களி , இளகினால் கூழ்.

* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

* உடல் உள்ள வரையில் கடல்கொள்ளாத கவலை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

* உண்ணாச்சொத்து மண்ணாய்ப்போகும்.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

* உலோபிக்கு இரட்டை செலவு.

* உளவு இல்லாமல் களவு இல்லை.

* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல,

* உள்ளது போகாது இல்லது வாராது.

* உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய..

* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* ஊசியைக் காந்தம் இழுக்கும் *உத்தமனைச்சிநேகம் இழுக்கும்.

* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப்பிந்துவான்.

* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

* எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

* எதார்த்தவாதி வெகுசன விரோதி.

* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

* எதை அடக்காவிட்டாலும் நாக்கைஅடக்கவேண்டும்.

* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

* எரிகிறதைப்பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எருமை வாங்கும் முன்னே நெய்க்குவிலை கூறாதே.

* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

* எலி வளையானாலும் தனிவலை வேண்டும்.

* எலும்புகடிக்கிற நாய் இரும்பைக்கடிக்குமா?

* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

* எள்ளூ என்கிறதற்குமுன்னே எண்ணெய்கொண்டு வருகிறான்.

* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான்முறை கொண்டாடும்.

* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத்தலைச்சுமை.

* ஏழை அமுதகண்ணீர் கூரியவாளை ஓக்கும்.

* ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

* ஐயர் வரும் அமாவாசை நிற்குமா?

* ஒரு காசுபேணின் இரு காசுதேறும்.

* ஒரு குடம்பாலுக்கு ஒரு துளிஉறை.

* ஒரு கைதட்டினால் ஓசைஎழும்புமா?

* ஒரு நன்றிசெய்தவரை உள்ள அளவும் நினை.

* ஒரு நாள்கூத்துக்கு மீசையைச்சிரைக்கவா?

* ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.

* ஒரு பொய்யைமறைக்க ஒன்பது பொய்சொல்லுதல்.

* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்குஅட்டமத்திலே சனி.

* ஓடுகிறவனைக்கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கடலைத்தாண்ட ஆசையுண்டு கால்வாயைத்தாண்டக்கால் இல்லை.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்

* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

* கடன் வாங்கிக்கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக்கைவிட்டனும் கெட்டான்.

* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

* கடுங்காற்று மழைகூட்டும் கடுஞ்சிநேகம் பகைகூட்டும்.

* கடுஞ்சொல் தயவைக்கெடுக்கும்.

* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

* கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

* கண் கண்டது கை செய்யும்.

* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

* கரணம் தப்பினால் மரணம்.

* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல

* கல்லாதவரே கண்ணில்லாதவர்.

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

* கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

* கள்ள மனம் துள்ளும்.

* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

* கனிந்த பழம் தானே விழும்.

* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

* காணி ஆசை கோடி கேடு.

* காப்பு சொல்லும் கை மெலிவை.

* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்

* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை

* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்

* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்

* காற்றில்லாமல் தூசி பறக்குமா?

* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

* கிட்டாதாயின் வெட்டென மற.

* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

* கீறி ஆற்றினால் புண் ஆறும்.

* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

* குணத்தை மாற்றக் குருவில்லை.

* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

* குப்பை உயரும் கோபுரம் தாழும்.

* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்:

* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

* குப்பையிற்கிடந்தாலும் குன்றிமணி நிறம்போகுமா?

* குரங்கின் கைப் பூமாலை.

* குரைக்கிற நாய் கடிக்காது.

* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது

* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

* கெடுவான் கேடு நினைப்பான்

* கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

* கேடு வரும்பின்னே, மதி கெட்டுவரும்முன்னே.

* கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்

* கையிலே காசு வாயிலே தோசை

* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

* கொடிக்கு காய் கனமா?

* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

* சாண் ஏற முழம் சறுக்கிறது.

* சாது மிரண்டால் காடு கொள்ளாது.

* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

* சுக துக்கம் சுழல் சக்கரம்.

* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

* சுட்ட சட்டி அறியுமா சுவை.

* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

* செயவன திருந்தச் செய்.

* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

* சேற்றிலே செந்தாமரை போல.

* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

* சொல் அம்போ வில் அம்போ?

* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்..

* சொல்வல்லவனை வெல்லல் அரிது.

* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

* தனிமரம் தோப்பாகாது.

* தன் வினை தன்னைச் சுடும்.

* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

* தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

* தருமம் தலைகாக்கும்.

* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

* தலை இருக்க வால் ஆடலாமா ?

* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன

* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

* தவளை தன் வாயாற் கெடும்.

* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !

* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

* நயத்திலாகிறது பயத்திலாகாது.

* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா

* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

* நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.

* நாள் செய்வது நல்லார் செய்யார்.

* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

* நித்திய கண்டம் பூரண ஆயிசு.

* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

* நித்திரை சுகம் அறியாது.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

* நிறைகுடம் தளம்பாது.

* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

* நீர் மேல் எழுத்து போல்.

* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

* நெருப்பு இல்லாமல் புகை எழும்புமா?

* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

* நொறுங்கத் தின்றால் நூறு வயது.

* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

* நோய் கொண்டார் பேய் கொண்டார்.

* பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

* பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

* பகைவர் உறவு புகை எழு நெருப்பு.

* பசியுள்ளவன் ருசி அறியான்.

* பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

* பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

* படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

* பணம் பத்தும் செய்யும்.

* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

* பதறாத காரியம் சிதறாது.

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

* பலநாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

* பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

* பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

* பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

* பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி

* புத்திமான் பலவான்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

* பெண் என்றால் பேயும் இரங்கும்..

* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

* பேராசை பெருநட்டம்.

* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

* பொறுமை கடலினும் பெரிது.

* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* போரோடுதின்கிற மாட்டுக்கு பிடுங்கி போட்டுக் கட்டுமா?

* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

* மண்டையுள்ள வரை சளி போகாது.

* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

* மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும்.

* மவுனம் கலக நாசம்

* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

* மனமுரண்டிற்கு மருந்தில்லை.

* மனம் உண்டானால் இடம் உண்டு.

* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

* மாரடித்த கூலி மடி மேலே.

* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

* முதல் கோணல் முற்றுங் கோணல்

* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

* முன் வைத்த காலைப்பின் வைக்கலாமா?

* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

* மைத்துணன் உதவி மலைபோல

* மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

* மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

* மொழி தப்பினவன் வழி தப்பினவன்

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

* வட்டி ஆசை முதலுக்கு கேடு.

* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.

* வேலிக்கு ஓணான் சாட்சி.

* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?

* விதி எப்படியோ மதி அப்படி.

* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

* விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

* விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமா?

* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

* வைக்கோற் போர் நாய் போல.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.


தமிழ் பழமொழிகள் - Tamil Proverbs
 
* அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
* அடியாத மாடு படியாது.
* அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளம்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வைக்கோற் போர் நாய் போல.


பொன் மொழிகள் -
 
உங்களைப் பற்றி நீங்கள் மட்டமாகப் பேசாதீர்கள்.
அதைப் பேசத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே?
********
தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.
********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று
நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி
நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்
நினைத்துக் கொள்வீர்கள்.
********
மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.
அதனால் விவாதத்தின்பின் யார் மூடன் என்பது
விளங்காமல் போய் விடும்.
********
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால்
உன் செவியை அடைத்துக்கொள்.
********
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.
*********
ஒருவரின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கும் போது
நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.
*********
இருளடைந்து கிடக்கிறதே என்று முணுமுணுப்பதை விட
சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேல்.
********
வீணான எண்ணங்கள் நச்சக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
*********
துயரங்களை எதிர் பார்ப்பவன்,
இரு முறை துயரம் அடைகிறான்.


   
சீனப் பழமொழிகள்.. (ருத்தேன் லும் மக்யூன் என்பவரின் தொகுப்பிலிருந்து)

● ரொட்டியின் படத்தை வரைந்து பசியைத் தீர்க்க முடியாது.

● மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல.

● புலியின் மீது சவாரி செய்தால் இறங்குவது கடினம்.

● நீரினால் ஒரு கப்பலை மிதக்கவும் வைக்கமுடியும், அதைக் கவிழ்க்கவும் முடியும்.

● நீரை அருந்தும்போது அதன் மூலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

● புன்னகை செய்யத் தெரியாத ஒருவன் வணிகத்தில் கால் வைக்கக்கூடாது.

● தாகம் எடுக்கும்வரை கிணறு தோண்டுவதை ஒத்திப் போடக்கூடாது.

● ஒரு கையினால் ஓசை எழுப்ப முடியுமா?

● மலர்கள் வெவ்வேறான கண்களுக்கு விதவிதமாகக் காட்சியளிக்கின்றன.

● ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு இரு படகுகளில் நிற்க முடியாது.

● குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது.

● தன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமென்பதால் ஒரு பறவை பாடுவதில்லை. தன்னிடம் ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது.

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல்

இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது

எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள்

என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான்

வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன்

அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள

வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும்

என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த

எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.


எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி

எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச்

சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது

ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக

முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில்

வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை

என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.

9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நாட்டில் நல்லவை நடக்கும்.

10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.

11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.

12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.

13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.

14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.

15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.

17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.

18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.

25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.

27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.

29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.

30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.

31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.

32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.

34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.

35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.

36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும் ; எந்தத் திட்டமும் நிறைவேறும்.

38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.

39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.

40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.

42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.

43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.

44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.

45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.

50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

52. கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.

56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.



58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.

60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.

64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.

65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.





பொன் மொழிகள்
 
* பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல. அது ஆன்மாவின் ஏக்கமாகும்.
* காலமென்னும் ஆழ்கடலில் பயணம் செய்யும் நமக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்பவை நல்ல புத்தகங்களே.
* சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம், தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம், சொந்தத்தை நம்பி நீ இருக்காதே, பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
* தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருளல்ல இன்னும் வெற்றி அடையவில்லை என்றுதான் பொருள்.
* தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் மனிதனே உலகில் வலிமை மிக்கவன்.
* உயர்வு தேடுபவனுக்கு உயர்வு வருவதில்லை, உயர்வுக்கு தகுதியுடையவனுக்கே உயர்வு வருகிறது


   
அயல் நாட்டுப் பழமொழிகள்
* கழுதையோடு நட்பு வைத்துக் கொண்டால் உதைகளை எதிர்பார்க்க வேண்டியதுதான் (இந்தியா)
* நரி உபதேசம் செய்யத் தொடங்கினால் உன் கோழிகளை கவனி (அல்பேனியா)
* நாய்களின் பிரார்த்தனையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படடால் வானம் எலும்பு மழை பொழியும் (துருக்கி)
* நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே (மலேசியா)
* சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பியழைக்க முடியாது (இங்கிலாந்து)






·    தமிழ் - Tamils Notizen
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
 
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
*
மிக மிக நல்ல நாள் - இன்று
*
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
*
மிகவும் வேண்டியது - பணிவு
*
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
*
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
*
மிகக் கொடிய நோய் - பேராசை
*
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
*
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
*
நம்பக் கூடாதது - வதந்தி
*
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
*
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
*
செய்யக் கூடியது - உதவி
*
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
*
உயர்வுக்கு வழி - உழைப்பு
*
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
*
பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி


சிந்தனைத் துளிகள், பொன்மொழிகள்
 
* மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும்.
* திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம்.
* எல்லா சந்தர்ப்பத்திலும் சமநிலையுடன் இருப்பதுதான் மகிழ்ச்சி.
* நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது உன் தோல்வியின் முதல்படியாக அமையும்.
* பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும்.
* நிஸப்தத்தை நாடுபவன் வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்துள்ளான்.
* வாழ்வின் அறநெறியை தேடுபவன் தன் வாழ்வின் அன்பு நெறியை உணர்ந்திருத்தல் அவசியம்.
* பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.
* அன்பை விலைக்கு வாங்குவது சுயநலமொன்றே, ஆகவே எச்சரிக்கையாய் இரு உன் அன்பர்களிடம்.
* நீ உன் உரிமையை இழப்பின் உன் உணர்வையும் இழப்பாய்.
* தொடங்கிய இடத்தை தெரிந்துகொள், அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.
* அன்பு என்றும் உன் உள்ளத்திலிருந்தால் அறிவு என்றும் உன்னை விட்டகலாது.
* உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம், எச்சரிக்கையாய் இரு.
* உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள்!
* ஒரு தவறை திரும்பத் திரும்பச் செய்வது மடமை, மடமையை திரும்பத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்?
* பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு, உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே!
* வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
* ஆர்வம் உடையோர் ஆர்வத்தை Àண்டுவர், அன்பு உடையோர் அன்பைத் தேடுவர்.
* எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
* சிந்திப்பதும் அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்து விடும்.
* அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும்.
* உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.
* கடவுளை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது அவர் செய்வதை நாமும் செய்வது படைப்பது.
* வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
   
   
சிந்தனைத் துளிகள்!
 
"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்.





பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?
 

அந்த பதினாறும் எவை?

௧. கல்வி

௨. அறிவு

௩. ஆயுள்

௪. ஆற்றல்

௫. இளமை

௬. துணிவு

௭. பெருமை

௮. பொன்

௯. பொருள்

௧0. புகழ்

௧௧. நிலம்

௧௨. நன்மக்கள்

௧௩. நல்லொழுக்கம்

௧௪. நோயின்மை

௧௫. முயற்சி

௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு
Tamil Art - ஆய கலைகள் அறுபத்தி நான்கு (64 Type of Arts)
 
Tamil Art ஆய கலைகள் அறுபத்தி நான்கு (64 Type of Arts)

1 அக்கர இலக்கணம்
2 லிகிதம் (இலிகிதம்)
3 கணிதம்
4 வேதம்
5 புராணம்
6 வியாகரணம்
7 நீதி சாஸ்திரம்
8 சோதிடம்
9 தரும சாஸ்திரம்
10 யோகம்
11 மந்திரம்
12 சகுனம்
13 சிற்பம்
14 வைத்தியம்
15 உருவ சாஸ்திரம்
16 இதிகாசம்
17 காவியம்
18 அலங்காரம்
19 மதுர பாடனம்
20 நாடகம்
21 நிருத்தம்
22 சத்த பிரமம்
23 வீணை
24 வேனு
25 மிருதங்கம்
26 தாளம்
27 அகத்திர பரீட்சை
28 கனக பரீட்சை
29 இரத பரீட்சை
30 கஜ பரீட்சை
31 அசுவ பரீட்சை
32 இரத்தின பரீட்சை
33 பூ பரீட்சை
34 சங்கிராம இலக்கணம்
35 மல்யுத்தம்
36 ஆகர்ஷணம்
37 உச்சாடணம்
38 வித்து வேஷணம்
39 மதன சாஸ்திரம்
40 மோகனம்
41 வசீகரணம்
42 இரசவாதம்
43 காந்தர்வ விவாதம்
44 பைபீல வாதம்
45 தாது வாதம்
46 கெளுத்துக வாதம்
47 காருடம்
48 நட்டம்
49 முட்டி
50 ஆகாய பிரவேசம்
51 ஆகாய கமனம்
52 பரகாயப் பிரவேசம்
53 அதிரிச்யம்
54 இந்திர ஜாலம்
55 மகேந்திர ஜாலம்
56 அக்னி ஸ்தம்பம்
57 ஜல ஸ்தம்பம்
58 வாயு ஸ்தம்பம்
59 திட்டி ஸ்தம்பம்
60 வாக்கு ஸ்தம்பம்
61 சுக்கில ஸ்தம்பம்
62 கன்ன ஸ்தம்பம்
63 கட்க ஸ்தம்பம்
64 அவத்தை பிரயோகம்





ஏறுமுக இலக்கங்களும் இறங்குமுக இலக்கங்களும்
 
ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்


இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்


gp.gp.rp jkpNohir
(if you didn`t have this Player
Click here)

Diese Webseite wurde kostenlos mit Homepage-Baukasten.de erstellt. Willst du auch eine eigene Webseite?
Gratis anmelden